ஒரு ஊரில் ஒரு ராஜா வாழ்ந்து வந்தார். அவர் மீது மக்கள் மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். காரணம் அவர் ஏழை மக்களுக்கு வரிவிலக்கு அளித்து நடுத்தர மக்களிடம் மட்டும் குறைவான வரிவிதிப்பு செய்தார். மேலும் மக்கள் கொண்டு வரும் வழக்குகளுக்கு சரியான தீருவையும் எடுத்துரைத்தார். மன்னர் ஒவ்வாரு முறை வழக்கில் தீர்வு கூறுகையில் அவரது வாரிசான இளைய மன்னர் தீர்ப்பை உன்னிப்பாக கவனித்து விமர்சனம் செய்து தந்தையை பாராட்டுவார். ஒரு முறை மன்னரிடம் வழக்கு விசாரணைக்குவந்தது. விவசாயி மன்னரிடம் எனது விவசாய நிலத்தில் பயிர்கள் நன்றாக விளைந்து இருந்தது அறுவடை செய்ய இருந்த நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் ஆடு எனது வயலில் இறங்கி பயிரை சீரழித்து விட்டது என்று கூறினார். மன்னர் எதிர்வாதியை அழைத்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.மன்னர் விளைச்சலுக்குப் பகரமாக நீ உன்னுடைய ஆடுகள் அனைத்தையும் அவருக்கு வழங்கி விட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதைக்கேட்ட இளவரசர் கடும் அதிருப்தி அடைந்ததை பார்த்த மன்னர் இளவரசரிடம் தீர்ப்பு பற்றி கருத்து கேட்க இளவரசர் தாம் கருத்து கூற விரும்பவில்லை என பதிலளித்தார். உடனே மன்னர் இவ்வழக்கிற்கு இளவரசர் தீர்ப்பு அளிப்பார்கள் என கூறி மன்னர் இளவரசரின் தீர்ப்பை கேட்க ஆவலாய் அமர்ந்தார். இளவரசர் தீர்ப்பு கூறினார் நீ உன்னுடைய ஆடுகள் அனைத்தையும் ஒரு ஆண்டிற்கு மட்டும் விவசாயிக்கு சொந்தம் ஒரு ஆண்டிற்கு பிறகு அவர் ஆடுகளை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த காலத்தில ஆடு ஈன்ற குட்டிகள் அனைத்தும் விவசாயிக்கு சொந்தம் இந்த காலத்தில் ஆட்டின் கழிவுகளை விவசாயி தனது நிலத்தில் பயன்படுத்திக் கொல்லலாம்.இதுவே இவ்வழக்கின் தீர்ப்பு என்றார் இதைக் கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர்.
நீதி
இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு பல்வேறு விதமாக வழங்கப்படுகிறது இதற்கு யார் பொறுப்பு ஏற்பது. குற்றம் ஒன்று தீர்ப்பு இரண்டு. இதற்கு கல்வி முறையில் மாற்றம் வேண்டுமா அல்லது சமுதாய மாற்றம் வேண்டுமா? நீதிபதிகள் கடவுளுக்கு சமம் என்றால் தீர்ப்பில் முரண்பாடுகள் ஏன். இன்றைய மாணவர்கள் அனைவரும் சிந்தியுங்கள் நாளைய மாற்றத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும்.
புதுகை அடிமை.
No comments:
Post a Comment